Thursday, November 4, 2010

இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள் ....

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி தின நல்வாழ்த்துக்கள் ....

நான் இந்த பதிவு எழுதும் நேரத்தில் அனைவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்
அனைவரும் தீபாவளிக்காக புது உடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் இன்னும் பல சமாச்சாரங்கள் புதிதாக வாங்கி இருப்பீர்கள்..

எனது சின்ன வயது தீபாவளிக்கும் இப்போதைய தீபாவளிக்கும் நிறைய வித்தியாசங்கள் வந்து விட்டன... முன்னரெல்லாம் உறவினர்கள் நமது வீட்டிற்கோ அல்லது நாம் அவர்கள் வீட்டிற்கோ செல்லும் பழக்கம் இருந்தது... இன்றோ எல்லா பண்டிகைகளும் தொ(ல்)லைக்காட்சி பெட்டியின் முன்
கழிக்கின்றோம் ...  இந்த மோகத்தில் சிறார்களை அவர்களாகவே பட்டாசு வெடிக்க அனுப்பும் பெற்றோர் இன்று இருக்கின்றனர், அவ்வாறு அவர்களை தனியாக அனுப்பாமல், சிறார்களை தங்கள் கவனத்தில் வைத்து பட்டாசை வெடிக்க கொடுங்கள்... சிறார்கள் மட்டும் அல்ல சில பெரியோர்களே  ஆர்வகோளாறு காரணகமாக பட்டாசுகளை தங்கள் கைகளில் பிடித்து எரிந்து விளையாட எத்தனிப்பவர்கள் அது மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஏன் அவர்களின் பாதுகாப்பிற்கும் கூட ஊறு விளைவிக்கும் என்பதை புரிந்துக் கொண்டு பெரியோர்கள் சிறார்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

மேலும் வெடி வெடிப்பது நமக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் வயோதிகப் பெரியவர்களுக்கு சில ஸ்ரமத்தையையும் கொடுக்கும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள் ...

பண்டிகை நாம் மட்டும் சந்தோஷமாக இருப்பதற்கு அல்ல மற்றோரையும் சந்தோஷ படுத்துமாறு இருப்பது நமது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும்...

பெரியோர்களும் சிறார்களின் மன நிலையை புரிந்துக் கொண்டு நடந்க்கொள்ளுங்கள்....

மேற்கூறிய சில விஷயங்கள் நமக்கு தெரிந்தாலும், சந்தோஷ மிகுதியில் நாம் அவற்றை கடை பிடிப்பது கிடையாது ...

எல்லோருக்கும் இந்த தீபாவளி, சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் அமைய என்னுடைய வாழ்த்துக்கள்...